Amma Message

  • அம்மா சொல்கிற நியமப்படி பயபக்தியோடு இருமுடி செலுத்தினால், பக்குவத்தோடு இருந்தால் தான் கேட்டது கிடைக்கும்.
  • எங்கெங்கு இருமுடி எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதோ அங்கங்கு பக்தி வளரும் அழிவுகள் குறையும்.
  • தொடர்ந்து இருமுடி செலுத்தக் கணக்குப் பார்க்காதே‚ நீ செலுத்தும் ஒவ்வொரு இருமுடிக்கும் பயன் உண்டு.
  • பொழுது போக்கிற்காக இருமுடி செலுத்தக் கூடாது.
  • நீ அணியும் சக்திமாலைதான் உனது மனசாட்சி.
  • மனித இனத்தை இறைவசமாக்க வேண்டியே இலவச இருமுடி போட்டு அழைத்துவரச் சொல்கிறேன்.
  • இருமுடியும் அன்னதானமும், உங்களையெல்லாம் இறைவசமாக்க உதவும் வழிகள்
  • நான் கூறும் விதி முறைப்படி உண்மையாக விரதமிருந்து இருமுடி ஏந்தி வரும் சக்திகளை அழிவிலிருந்து காப்பாற்றுவேன்.
  • மழை, வெள்ளம், இயற்கைச் சீற்றங்களிலிருந்து விடுபட இருமுடி ஏந்தி வரவேண்டும்.
  • உங்கள் பாவங்களைத் தணிக்கவே இருமுடி
  • இருமுடி விஷயத்தில் கணக்குப் பார்க்காதே
  • இருமுடித் தொண்டு பொறுப்பான தொண்டு‚ அத்தொண்டு என்றும் வீண் போகாது
  • இருமுடி செலுத்தினால் மட்டும் போதாது‚ பத்துப் பேருக்குத் தருமம் செய்ய வேண்டும்.
  • ஏழை, எளிய மக்களுக்கும் சக்தி மாலை அணிவித்து அழைத்து வருவது இந்த நாட்டிற்கும் நல்லது.
  • தொடர்ந்து இருமுடி செலுத்து‚ ஒன்பது மாலை போதும்‚ பத்து மாலை போதும்‚ என்று நிறுத்திக் கொள்ளாதே
  • விரதமிருந்து, கட்டுப்பாட்டை மேற்கொண்டு இருமுடி ஏந்தி வருகிற சிலருக்குக் காட்சி கொடுப்பேன்.
  • இருமுடி பிரிக்கும் போது பிரிப்பவர்களும் மௌனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  • கருவறையில் இருமுடி அபிடேகம் செய்யும்போது மௌனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  • கருவறையின் வாயிற்படியை மறைக்காமல் நின்றபடி அபிடேகம் செய்ய வேண்டும்.
  • உலகமே சிவப்பாகி, சிவப்பு மஞ்சளாகி, மஞ்சள் பச்சையாக மாறுகின்ற வாய்ப்பைக் கொடுக்க போகிறேன்.
  • ஆன்மிகம் என்பது எளிமையும் வலிமையும் கொண்டது.
  • ஆன்மா எப்பொழுது நினைக்கிறதோ அப்பொழுதுதான் உடலை விட்டுப் போகும்.
  • ஆன்மிகத்தில் அவ்வப்போது கிடைக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டால்தான் பலன் கிடைக்கும்.
  • உணர்ச்சி வசப்படுதல், கோபப்படுதல் ஆகிய குணங்கள் ஒருவன் தன்னையே அழித்து விடும்.
  • இயற்கையில் உருவாகும் கல் அம்மனாகவும், சிவனாகவும் மாறுகிறது.
  • அதுபோல மனிதனும் முயன்றால் தெய்வமாக மாறலாம்.
  • மருத்துவம், விவசாயம் ஆகிய எல்லாத் துறைகளுக்கும் கடல், ஆகாயம் போன்ற இயற்கை அவசியம்.
  • ஆன்மிகம், தொண்டு, தருமம் ஆகியவற்றில் சோம்பேறித்தனம் ஏற்பட்டால் அழிவு ஏற்படும்.
  • ஆலயத்தினால் உனக்குப் பெருமையே தவிர உன்னால் ஆலயத்துக்குப் பெருமை இல்லை.
  • ஆரம்பத்தில் எப்படி வந்து செயல்பட்டீர்களோ, அவ்வாறே இப்பொழுதும் செயல்பட வேண்டும்.
  • முடியாது என்று எதையும் சொல்லக்கூடாது.
  • உன்னை நினைக்க வைப்பதும் நான்.
  • நினைவாக இருப்பதும் நான்தான்.
  • வெளியில் இருப்பவன் உள்ளே வரமுடியும்.
  • உள்ளே இருப்பவன் வெளியே போனால் திரும்பி வரமுடியாது.
  • ஓய்வு நேரத்தை ஆன்மிகத்துக்காகப் பயன்படுத்த வேண்டும்.
  • ஆன்மிகத்தில் வழிகாட்டியாகவும் ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும்.
  • அரசியல் பற்றிக் கவலைப்படாமல் எண்ணத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.
  • ஒரே எண்ணம்‚ ஒரே பார்வையில் இருக்க வேண்டும்.உழைப்பு குறைந்து போய் விட்டதால் பற்றாக்குறை அதிகமாகி விட்டது.
  • உனது தேவைகள், உனது வேதனைகள், உனது சோதனைகள் ஆகியவற்றை என்னிடம் விட்டு விடு.
  • ஆன்மா என்ற பாத்திரத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • நான் கூறுவனவற்றைத் தலையாட்டிக் கேட்டால் மட்டும் போதாது.  பொறுப்பேற்றுச் செய்யவும் வேண்டும்.உங்களுக்கு நான் கற்றுக் கொடுக்கும் ஆன்மிகத்தை நீங்கள் பலருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
  • பணத்திற்காகச் செய்யும் தொண்டு பிணத்துக்குச் சமம்.
  • பக்தியோடு செய்யும் தொண்டுதான் உண்மையானது.
  • தொண்டு செய்யாவிட்டால் துண்டு விழும்.
  • உண்மையான தொண்டு வெளிச்சத்துக்கு வரும்.
  • பொய்யான தொண்டு வெளிச்சத்துக்கு வராது.
  • நீ செய்கிறாய், நான் கொடுக்கிறேன்.  நான் கொடுப்பதை நீ நான்கு பேருக்குக் கொடுக்க வேண்டும்.  ஆனால் யாரையும் கெடுக்கக் கூடாது.
  • செவ்வாடை அணிபவர்களுக்குச் சேவை மனப்பான்மையும், செவிலித்தாய் மனப்பான்மையும் இருக்க வேண்டும்.
  • எப்பொழுதும் சந்தோஷத்துடனும், உண்மை உணர்வோடும் தொண்டு, செய்ய வேண்டும்
  • நீ இருக்கும் வரை வாழ்வதற்கு நான் வழிகாட்டியாக இருக்கிறேன்.
  • அமைதியாக வாழ்ந்து விட்டுப் போவெளியில் இருப்பவன் உள்ளே வருவான்.
  • உள்ளே இருப்பவன் வெளியில் போகாமல் பார்த்துக் கொள்.கணவன் மனைவியாகப் பொதுத் தொண்டில் ஈடுபடுவது கடினம்.
  • ஆனாலும் அப்படி ஈடுபட்டால் நல்ல பயன் உண்டு.
  • ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்களில் சென்று வழிபட்டாலே பயன் உண்டு.
  • ஆன்மிகத்தில் தொண்டுதான் முக்கியம்.அடிக்கடி தூசு தட்டுவது போல, தொண்டு, தருமம் உள்ளம் ஆகியவற்றை தட்டி எழுப்ப வேண்டும்.
  • தருமம், தொண்டு செய்து வந்தால் எந்த ஆபத்தும் இல்லை.ஆனால் பொறாமையும் அழுக்கும் சேர்ந்தால் ஆபத்து.
  • அம்மா இருக்கிறாள் என்று பாம்பு, தேள் இருக்கும் இடத்தில் கை வைக்கக் கூடாது.
  • அம்மா சொல்லிவிட்டார்களே என்று கடனே என்றும் ச%